என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
சிதம்பரம் அருகே வாகன சோதனையில் ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம் பறிமுதல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் பணம் காரில் எடுத்துச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து காரில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் செஞ்சி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 47). என்பதும் அவர் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்களை மொத்தமாக சப்ளை செய்து வருவதாகவும் அந்த கடைக்காரர்களிடம் இருந்து தற்போது பணம் வசூலித்து செல்வதாகவும் கூறினார்.
இருப்பினும் அவர் எடுத்துச் செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் பணம் காரில் எடுத்துச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து காரில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் செஞ்சி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 47). என்பதும் அவர் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்களை மொத்தமாக சப்ளை செய்து வருவதாகவும் அந்த கடைக்காரர்களிடம் இருந்து தற்போது பணம் வசூலித்து செல்வதாகவும் கூறினார்.
இருப்பினும் அவர் எடுத்துச் செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
Next Story






