என் மலர்
செய்திகள்

மின்சாரம் நிறுத்தம்
மணல்மேட்டில் நாளை மின்தடை
மணல்மேட்டில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மணல்மேடு:
மணல்மேடு துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, வடவஞ்சார், திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்து உள்ளனர்.
Next Story






