என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்காலில் துப்புரவு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்5 March 2021 9:27 PM GMT (Updated: 5 March 2021 9:27 PM GMT)
காரைக்காலில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் துப்புரவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் நெடுங்காடு புத்தகுடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 51). கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு ஊழியர். இவரது மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சுந்தரமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை மனைவி கண்டித்ததால், அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அப்போது சுந்தரமூர்த்தி தற்கொலை செய்துகொள்வதாக சுலோச்சனாவை மிரட்டிவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் கொள்ளை புறத்தில் சுந்தரமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெடுங்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X