என் மலர்
செய்திகள்

விபத்து பலி
காவேரிப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
காவேரிப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அருகே பாகவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 27), ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து சென்று சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம் அருகே பாகவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 27), ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து சென்று சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






