என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எம்.எல்.ஏ.க்களுக்கு சாக்கு மூட்டையில் பணம்- வைத்திலிங்கம் எம்பி சொல்கிறார்
புதுச்சேரி:
புதுவையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
கியாஸ் விலை ஆயிரமாகி விட்டது. தேர்தல் வருவதற்குள் ஆயிரத்து 500 ஆகிவிடும். அம்பானி, அதானிக்கு கொடுக்க பணம் போதவில்லை. புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு சாக்கில் கட்டி பணத்தை கொடுக்கிறார்கள். அதனால் தான் எம்.எல்.ஏ.க்கள் ஓடினர்.
தனி விமானத்தில் பணம் வருகிறது. கியாஸ் விலையை உயர்த்திய காசுதான் அது. பணம் வாங்கிக்கொண்டு ஓடுகிறீர்களே, உங்களுக்கு வெட்கம் இல்லையா?
பிரதமர் மோடி புதுவைக்கு வரும் போது மாநிலத்துக்கான கடன் தொகையை வழங்குவார், இலவச அரிசி வழங்கப்படும் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.ஆனால், பிரதமர் வந்து சென்றும் எதுவும் சொல்லியபடி நடக்க வில்லை.
புதுவைக்கு எதிரான கவர்னரை விரட்டி இருக்கிறோம். இன்னொருவரும் அதே போல் வந்துள்ளார்.
புதுவை சட்டப் பேரவையில் அமைச்சரவை அரங்கில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி உள்ளார். கவர்னர் மாளிகையில் இடம் இருக்கும் போது, பேரவை அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தி ஜனநாயகத்தை அவர் நசுக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்