என் மலர்
செய்திகள்

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக 044-27236205, 27236206, 27236207, 27236208 என்ற தொலைபேசி எண்களும் 18004257087 என்ற இலவச தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி தலைமையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் பணிகள் தொடர்பாக கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:-
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக 044-27236205, 27236206, 27236207, 27236208 என்ற தொலைபேசி எண்களும் 18004257087 என்ற இலவச தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆலந்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய விரிவாக்க திட்ட தனித்துணைஆட்சியர் எஸ்.சாந்தி (9488470006) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் டி.முத்து மாதவன் (9444964899) நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்திரமேரூர் தொகுதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி (9445000168) நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி (9445000413) நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 8,983 பேரும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட 2,100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு தணிக்கை குழு, உதவி செலவின மேற்பார்வையாளர் குழு, செலவு கண்காணிப்பு பிரிவு குழு, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு உள்ளிட்ட 8 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்படும். பதட்டமான வாக்குச்சாவடிகளாக 178 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி தலைமையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் பணிகள் தொடர்பாக கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:-
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக 044-27236205, 27236206, 27236207, 27236208 என்ற தொலைபேசி எண்களும் 18004257087 என்ற இலவச தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆலந்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய விரிவாக்க திட்ட தனித்துணைஆட்சியர் எஸ்.சாந்தி (9488470006) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் டி.முத்து மாதவன் (9444964899) நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்திரமேரூர் தொகுதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி (9445000168) நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி (9445000413) நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 8,983 பேரும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட 2,100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு தணிக்கை குழு, உதவி செலவின மேற்பார்வையாளர் குழு, செலவு கண்காணிப்பு பிரிவு குழு, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு உள்ளிட்ட 8 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்படும். பதட்டமான வாக்குச்சாவடிகளாக 178 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






