என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி ஆட்சி அமலான நிலையில் கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்
Byமாலை மலர்27 Feb 2021 4:30 AM GMT (Updated: 27 Feb 2021 4:30 AM GMT)
ஜனாதிபதி ஆட்சி அமலான நிலையில் புதுவை கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் புதுவையில் ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வழக்கமாக ஜனாதிபதி ஆட்சி நடக்கும்போது அவரது பிரதிநிதியாக கவர்னர்களே மாநில நிர்வாகத்தை கவனிப்பார்கள். அதேபோல் தற்போது புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாநில நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
அவ்வாறு நிர்வாகத்தை கவனிக்கும் கவர்னர்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்களை மத்திய அரசு நியமிக்கும். அந்த விதிகளின் அடிப்படையில் புதுவை கவர்னருக்கும் ஆலோசனை வழங்க 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன்படி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரமவுலி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரல் ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவினை மத்திய அரசின் துணை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ஆலோசகர்கள் இருவரும் விரைவில் புதுவை வந்து பொறுப்பேற்க உள்ளனர்.
புதுவையில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் புதுவையில் ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வழக்கமாக ஜனாதிபதி ஆட்சி நடக்கும்போது அவரது பிரதிநிதியாக கவர்னர்களே மாநில நிர்வாகத்தை கவனிப்பார்கள். அதேபோல் தற்போது புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாநில நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
அவ்வாறு நிர்வாகத்தை கவனிக்கும் கவர்னர்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்களை மத்திய அரசு நியமிக்கும். அந்த விதிகளின் அடிப்படையில் புதுவை கவர்னருக்கும் ஆலோசனை வழங்க 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன்படி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரமவுலி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரல் ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவினை மத்திய அரசின் துணை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ஆலோசகர்கள் இருவரும் விரைவில் புதுவை வந்து பொறுப்பேற்க உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X