search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயா
    X
    ஜெயா

    பட்டாசு ஆலை வெடி விபத்து- காயம் அடைந்த பெண் உயிரிழப்பு

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியானார்கள்.

    20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியை சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜெயா (வயது50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×