என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
Byமாலை மலர்25 Feb 2021 3:42 AM GMT (Updated: 25 Feb 2021 3:42 AM GMT)
புதுவை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 18-ந்தேதி பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது அரசுத் துறைகளில் ஆய்வு நடத்தி வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் ரோடியர் மில் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அவர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
இந்தநிலையில் தற்போது அவர்களுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்படுவதை 3 முட்டைகளாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரி மாநிலத்திலுள்ள 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அக்குழந்தைகளின் புரதச் சத்தின் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்படுவதை உயர்த்தி வாரம் 3 முட்டைகள் வீதம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசுத் துறைக்கு அறிவுறுத்தினார். அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் அளித்தார்.
இதனால் 29 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர். புதுச்சேரி அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1 கோடியே 68 லட்சம் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி கவர்னராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 18-ந்தேதி பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது அரசுத் துறைகளில் ஆய்வு நடத்தி வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் ரோடியர் மில் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அவர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
இந்தநிலையில் தற்போது அவர்களுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்படுவதை 3 முட்டைகளாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரி மாநிலத்திலுள்ள 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அக்குழந்தைகளின் புரதச் சத்தின் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்படுவதை உயர்த்தி வாரம் 3 முட்டைகள் வீதம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசுத் துறைக்கு அறிவுறுத்தினார். அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் அளித்தார்.
இதனால் 29 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர். புதுச்சேரி அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1 கோடியே 68 லட்சம் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X