என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது
Byமாலை மலர்21 Feb 2021 1:24 AM GMT (Updated: 21 Feb 2021 1:24 AM GMT)
மொடக்குறிச்சி அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு விற்பனை முடிந்ததும் டாஸ்மாக் கடையை அடைத்துவிட்டு உள்ளே இருந்து வரவு, செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு 4 பேர் மது குடிக்க வந்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரும் மதுபானம் வேண்டும் என்று ராஜனிடம் கேட்டு உள்ளனர். அதற்கு அவர், ‘கடை நேரம் முடிந்துவிட்டது. எனவே மதுபானம் தர முடியாது,’ என கூறினார்.
இதனால் 4 பேரும் ஆத்திரம் அடைந்து ராஜனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கண் மற்றும் தலையில் ராஜனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை தாக்கிய 4 பேரையும் வலைவீசி ேதடி வந்தனர்.
இந்த நிலையில் லக்காபுரத்தில் இருந்து ஆனைக்கல்பாளையம் செல்லும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் பதுங்கி இருப்பதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர்கள் லக்காபுரம் நொச்சிக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான அன்பரசன் (38), அந்த நிறுவனத்தின் ஊழியரான ஈரோடு ரயில்வே காலனி மோளக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார் (33), லட்சுமி நகர் ரணியன் வீதியை சேர்ந்த நந்தகுமார் (30), ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமார வீதியை சேர்ந்த தயாளன் (32) என்பதும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து டாஸ்மாக் விற்பனையாளரான ராஜனை தாக்கியதும்,’ தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு விற்பனை முடிந்ததும் டாஸ்மாக் கடையை அடைத்துவிட்டு உள்ளே இருந்து வரவு, செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு 4 பேர் மது குடிக்க வந்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரும் மதுபானம் வேண்டும் என்று ராஜனிடம் கேட்டு உள்ளனர். அதற்கு அவர், ‘கடை நேரம் முடிந்துவிட்டது. எனவே மதுபானம் தர முடியாது,’ என கூறினார்.
இதனால் 4 பேரும் ஆத்திரம் அடைந்து ராஜனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கண் மற்றும் தலையில் ராஜனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை தாக்கிய 4 பேரையும் வலைவீசி ேதடி வந்தனர்.
இந்த நிலையில் லக்காபுரத்தில் இருந்து ஆனைக்கல்பாளையம் செல்லும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் பதுங்கி இருப்பதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர்கள் லக்காபுரம் நொச்சிக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான அன்பரசன் (38), அந்த நிறுவனத்தின் ஊழியரான ஈரோடு ரயில்வே காலனி மோளக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார் (33), லட்சுமி நகர் ரணியன் வீதியை சேர்ந்த நந்தகுமார் (30), ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமார வீதியை சேர்ந்த தயாளன் (32) என்பதும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து டாஸ்மாக் விற்பனையாளரான ராஜனை தாக்கியதும்,’ தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X