search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாத்தூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    சாத்தூர் வடக்கு ரத வீதியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய தொழிற்சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் வடக்கு ரத வீதியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய தொழிற்சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சாலை வியாபாரிகள் சங்கத்தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் விஜயகுமார் கண்டன உரை ஆற்றினார்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் சாலை வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, வேன், கார் ஓட்டுனர் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த உறுப்பினர் பிச்சைக்கனி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×