என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி
    X
    அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி

    மாநில அளவிலான கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு

    மாநில அளவிலான கராத்தே போட்டியில் அரியலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூரில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். 7 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் வரை பல மாவட்டங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். கத்தா, குமித்தே, குத்துச்சண்டை, உதையாட்டம், சிலம்பம், வாள் வீச்சு, கராத்தே என 7 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் சிலம்பூர் அரசு பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் 21 பேர் கலந்து கொண்டனர். 

    இதில், 11-ம் வகுப்பு மாணவி சந்தியா சிலம்பத்தில் இரண்டாம் பரிசும், 9-ம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ கராத்தேவில் முதலிடமும், 9-ம் வகுப்பு மாணவி ரோஷினி கத்தாவில் இரண்டாம் இடமும், 11-ம் வகுப்பு மாணவி கவுரி சங்கரி முதல் இடமும், வாள் சண்டையில் 11-ம் வகுப்பு மாணவி சங்கீதா மூன்றாம் இடமும், குமித்தே போட்டியில் 10-ம் வகுப்பு மாணவர் திருமுருகன் முதலிடமும், உதையாட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவன் கவுதம் மூன்றாம் இடமும் பெற்றனர். மேலும், 9-ம் வகுப்பு மாணவர்கள் தனுஷ், மனோஜ் ஆகியோர் உதைஆட்டத்தில் முதல் இடமும், 9-ம் வகுப்பு மாணவர்கள் பிரவீன், பிரசாந்த் குத்துச்சண்டையில் முதல் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் சரவணனையும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஊர்மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×