என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புபடம்
மொரப்பூர் அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதல் - அரசு பள்ளி ஆசிரியை பலி
By
மாலை மலர்18 Feb 2021 9:32 AM GMT (Updated: 18 Feb 2021 9:32 AM GMT)

மொரப்பூர் அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 46). இவர் மொரப்பூர் அருகே உள்ள காட்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக சங்கீதா மொபட்டில் மொரப்பூர் வழியாக காட்டனூர் நோக்கி சென்றார்.
அப்போது மொரப்பூர் அருகே பாளையம்-போடம்பட்டி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் ஆசிரியை படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
