என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    வேதாரண்யம் அருகே குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் மணக்காடு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காமராஜ் (வயது50). விவசாய கூலித்தொழிலாளி. இவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். மேலும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்து(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காமராஜுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
    Next Story
    ×