என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது
Byமாலை மலர்12 Feb 2021 10:19 AM GMT (Updated: 12 Feb 2021 10:19 AM GMT)
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் சிறுமியை கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது வெள்ளித்திருப்பூர் மாக்களூரை சேர்ந்த சண்முகம் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.
சண்முகம் கொளப்பலூரில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் அந்த சிறுமியும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சிறுமியிடம் சண்முகம் ஆசை வார்த்தை கூறி கடத்தி உள்ளார். இதனையடுத்து சண்முகம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் சிறுமியை கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது வெள்ளித்திருப்பூர் மாக்களூரை சேர்ந்த சண்முகம் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.
சண்முகம் கொளப்பலூரில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் அந்த சிறுமியும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சிறுமியிடம் சண்முகம் ஆசை வார்த்தை கூறி கடத்தி உள்ளார். இதனையடுத்து சண்முகம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X