search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒற்றை யானை தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி சாதம்மா.
    X
    ஒற்றை யானை தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி சாதம்மா.

    உத்தனப்பள்ளி அருகே நடந்து சென்ற மூதாட்டியை ஒற்றை யானை தூக்கி வீசியது

    சூளகிரி அருகே நடந்து சென்ற மூதாட்டியை ஒற்றை யானை இன்று தூக்கி வீசியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
    சூளகிரி:

    கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு, அஞ்செட்டி, உத்தனப்பள்ளி, ஊடேதுர்க்கம் ஆகிய இடங்களில் முகாமிட்டு உள்ளன.

    அதே நேரத்தில் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினரும் கண்காணித்து வருகிறார்கள். யானைகள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் தெய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சூளகிரி அருகே நடந்து சென்ற மூதாட்டியை ஒற்றை யானை இன்று தூக்கி வீசியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி அடுத்த சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் சாதம்மா (வயது 65).

    இவர் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மறைவாக நின்று கொண்டிருந்த ஒற்றையானை திடீரென சாதம்மாவை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயமடைந்து அலறினார்.

    அப்போது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். உடனே அவர்கள் கூச்சல் போட்டதால் அங்கு நின்ற ஒற்றை யானை சென்று விட்டது.

    பிறகு காயத்துடன் கிடந்த சாதம்மாவை மீட்டுஒசூர் மருத்தவமனை சேர்த்தனர். மேலும் ஒற்றை யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கும் கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×