என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி குத்திக்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கொல்லூர்பட்டியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 55), தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் வெள்ளைச்சாமி (44).
இவரது சொந்த ஊர் வெம்பக்கோட்டை ஆகும். கூலித்தொழிலாளியான வெள்ளைச்சாமி வேலைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லூர்பட்டியில் வீடு எடுத்து வசித்து வந்தார். இதனை காரணம் காட்டி சிவலிங்கம் அடிக்கடி கேலி செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 2 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது போதையில் வெளியூர்காரன் இங்கு வந்து பிழைப்பு நடத்துவது ஏன்? என சிவலிங்கம் கேட்டுள்ளார். இது வெள்ளைச்சாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மது மயக்கத்தில் இருந்தவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தை சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
கொலை குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிவலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வெள்ளைச்சாமியை கைது செய்து செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்