என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கீழப்பழுவூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

    கீழப்பழுவூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கருவிடைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன்(வயது 72). விவசாயியான இவர் நேற்று காலை அவரது வயலுக்கு நடந்து சென்றார். 

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×