என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்திராயிருப்பில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    வத்திராயிருப்பில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வத்திராயிருப்பில் விவசாயிகள் சாலை மறியல்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வத்திராயிருப்பில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். 

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மணிக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தாலுகா செயலாளர் கோவிந்தன், சுப்பையா, ராமராஜ், முத்துராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    சேத்தூரிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் வீராசாமி, ராஜபாளையம் நகர செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் குருசாமி, ராமர், விவசாய சங்க பிரதிநிதி ராமச்சந்திர ராஜா உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்கைது செய்தனர்.
    Next Story
    ×