என் மலர்
செய்திகள்

விஷம்
கடலூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை- போலீசார் விசாரணை
கடலூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள மாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி கல்பனா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்பனா, விஷத்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள மாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி கல்பனா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்பனா, விஷத்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






