search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயணைப்பு துறையின் சார்பில் தீவிபத்தின் போது கையாளவேண்டிய அணுகுமுறை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடந்த காட்சி
    X
    தீயணைப்பு துறையின் சார்பில் தீவிபத்தின் போது கையாளவேண்டிய அணுகுமுறை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடந்த காட்சி

    மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - தீயணைப்புதுறை- காவல்துறை சார்பில் நடந்தது

    மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை சார்பில் நடைபெற்றது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தீயணைப்புதுறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மோட்டார் வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அந்த தீயை அணைத்து அதில் இருந்து மீள்வது குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியை தீயணைப்புத்துறையினர் செய்து காண்பித்தனர். தொடர்ந்து தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘தீ செயலி'யை பயன்படுத்தி தீ விபத்து ஏற்பட்டால் எளிதில் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களை எப்படி தொடர்பு கொள்வது? என்பது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் போலீசார், தன்னார்வலர்கள், வாகன ஓட்டிகள், வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயல் விளக்க நிகழ்ச்சியை மயிலாடுதுறை தீயணைப்புதுறை வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    சீர்காழி பஸ் நிலையத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுரு வரவேற்று பேசினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றார்.

    இந்த ஊர்வலத்தில் சீர்காழி போலீசார், தனியார் வாகன ஓட்டுனர் பயிற்சி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை சாலை, கடைவீதி வழியாக கொள்ளிடம் முக்கூட்டை வந்தடைந்தது.
    Next Story
    ×