search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்து கிடந்த பெண் யானை
    X
    இறந்து கிடந்த பெண் யானை

    பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை மரணம்

    பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்த கிடந்த பெண் யனையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
    ஈரோடு:

    பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுபீர்கடவு வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து உடனே வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் நிகார் ரஞ்சன், மாவட்ட வன அலுவலர் அருண்லால் ஆகியோரின் உத்தரவின் பேரில், பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். பின்னர் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அதன்பின்னர் கால்நடை டாக்டர் அசோகன் கூறும்போது, இறந்து கிடந்தது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்று கூறினார். மேலும் யானையின் உடல் கூறுகள் பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பப்படும். அதன் முடிவு வந்த பின்னரே யானை எப்படி இறந்தது? என்று தெரியவரும் என்றார். பிறகு அதே இடத்தில் குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.
    Next Story
    ×