என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவண்ணாமலை அருகே வறுமையால் முதியோர் தம்பதி வி‌ஷம் குடித்து தற்கொலை

    திருவண்ணாமலை அருகே வறுமையால் முதியோர் தம்பதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள தானாநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 90), இவருடைய மனைவி காயாம்பாள் (80), தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    கந்தசாமி தம்பதியை கவனிக்க ஆளில்லை. இதனால் வறுமையில் வாடி வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட கந்தசாமி, காயாம்பாள் இருவரும் நேற்று இரவு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை அவர்கள் வீட்டில் இறந்து கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×