என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மீன்சுருட்டி அருகே அரசு பஸ் மோதி வேன் டிரைவர் பலி
மீன்சுருட்டி அருகே அரசு பஸ் மோதியதில் வேன் டிரைவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் தெற்குத்தெருவை சேர்ந்தவர் அருளழகன் (வயது 32). இவர் சென்னையில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனிஷா (24) என்ற மனைவியும், அபிஷா, வெண்பா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
அருளழகன் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக அவர் மீன்சுருட்டி சென்றதாக கூறப்படுகிறது. சம்போடை கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அருளழகன் உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, அருளழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story