search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் (கோப்புப்படம்)
    X
    போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் (கோப்புப்படம்)

    சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பெயர் மாற்றம்

    உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் கொண்டு வந்து பெயரையும் மாற்றியுள்ளது தமிழக அரசு.
    சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உயர்கல்விதுறையின் கீழ் இயங்கி வந்தது. இந்த கல்லூரில் அரசு கல்லூரியை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் தொடர்ந்து போட்டம் நடத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக அரசு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    மற்ற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் இனி இங்கேயும் வசூலிக்க நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×