search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைக்கவசம் அணிந்து போலீசார் விழிப்புணர்வு நடத்திய காட்சி.
    X
    தலைக்கவசம் அணிந்து போலீசார் விழிப்புணர்வு நடத்திய காட்சி.

    மானாமதுரையில் தலைக்கவசம் அணிந்து போலீசார் விழிப்புணர்வு

    மானாமதுரையில் போலீசார் தலைக்கவசம் அணிந்து வாகன ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    மானாமதுரை:

    போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மானாமதுரையில் போலீசார் தலைக்கவசம் அணிந்து வாகன ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த வாகன ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அவசியம் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக நடந்தது.
    Next Story
    ×