என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மகுடஞ்சாவடி அருகே சிற்பி தற்கொலை
மகுடஞ்சாவடி அருகே சிற்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பிள்ளை:
மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.தாழையூர் பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில் சிற்பியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பைனான்ஸ் நிறுவனத்திடம் தனது நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார். நண்பர் கடனை திருப்பி கட்டாததால் பைனான்சியர் இவரிடம் கேட்கவே மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அத்தியப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story