search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு பயிற்சி- கவர்னர் தகவல்

    புதுச்சேரி மாணவர்களுக்கு ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும் என கவர்னர் கிரண்பேடி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி: 

     புதுச்சேரி மாணவர்களுக்கு ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும் என கவர்னர் கிரண்பெடி அறிவித்துள்ளார். கவர்னர் கிரண்பேடி 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன், பொறுப்புள்ள குடிமக்களாக  மாணவர்களை வளரச்செய்தல் என்ற தலைப்பில் காணொலிக்காட்சி மூலமாக கலந்துரையாடினார். 

    இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 2,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். துறை செயலர் அசோக்குமார்  தொடக்கவுரையாற்றினார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிரு‌‌ஷ்ணன் தொகுத்து வழங்கினார். 

    இதில் சுயசார்பு, திறன்மேம்பாடு, குடிமை பணி, இந்திய நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய சவால்கள், விவசாயம், நீர் பாதுகாப்பு, மேலாண்மை, ஊழலற்ற இந்தியா,  தொழில்முனைவோர் தொடர்புடைய 20 கேள்விகளுக்கு விடையளித்து, பொறுப்புள்ள குடிமக்களாக எவ்வாறு வளர்வது குறித்து விளக்கினார். 

    மேலும் சுயசார்பினால் மட்டுமே ஒரு மாணவர் தன் லட்சிய கனவுகளை நினைவாக்கி கொள்ள முடியும். அறிவு, மனிதாபிமானம், தொழில் திறன்களை  வளர்த்துக்கொண்டால் ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக வரலாம். 

    இந்திய ஆட்சி பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) மற்றும் புதுச்சேரி குடிமை முறை பணி ஆகிய அதிகாரிகளின் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு  இந்திய அளவிலான குடிமை பணி போட்டி தேர்வில் பங்குகொள்ள பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். 

     இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×