search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காரில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சாராயம் பறிமுதல்- அமமுக பிரமுகர் கைது

    நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அ.ம.மு.க. பிரமுகரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் பகுதியில் மதுவிலக்கு சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் (வயது48) என்பதும், காரைக்கால் மாவட்டம் அ.ம.மு.க.வைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர் திருவாரூர் மாவட்டத்திற்கு காரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.ம.மு.க. பிரமுகர் சர்புதீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×