என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடையில் தரம் குறைந்த அரிசி வழங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்20 Jan 2021 9:06 AM GMT (Updated: 20 Jan 2021 9:06 AM GMT)
ரேஷன் கடையில் தரம் குறைந்த பழுப்பு நிற அரிசி வழங்கியதால் பொதுமக்கள் செம்பதனிருப்பு கடைத் தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்காடு:
சீர்காழி அருகே மேல்நாங்கூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் நேற்று காலை பொதுமக்கள் அரிசி வாங்க வந்தனர். அப்போது அவர்களுக்கு விற்பனையாளர் தரம் குறைந்த மற்றும் பழுப்பு நிறமாக காணப்பட்ட அரிசியை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நாகை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பதனிருப்பு கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த சீர்காழி தாசில்தார் ஹரிதரன், வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், கிராம முக்கியஸ்தர் முத்து ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X