என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடந்த 3 நாட்களில் 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் ஏற்கனவே 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. 16,198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    69 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,509 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி மாவட்டத்தில் 7 மையங்களில் போடப்பட்டு வருகிறது.

    கடந்த 3 நாட்களாக திட்டமிட்டபடி தடுப்பூசி போட வாய்ப்பில்லை.

    நேற்று 575 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 869 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி 3 நாட்களில் 2,100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

    முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு 9,720 டோஸ் மருந்து அனுப்பப்பட்டுள்ளது.

    10,000 சுகாதாரப்பணியாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்ட போதிலும் நடைமுறையில் தடுப்பூசி போட முன் வருபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.
    Next Story
    ×