என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
Byமாலை மலர்18 Jan 2021 2:17 PM GMT (Updated: 18 Jan 2021 2:17 PM GMT)
திட்டசேரி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கக்கோரி வயதில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கீழப்பூதனூர், திருச்செங்கட்டாங்குடி ஊராட்சி பகுதிகளில் 3 ஆயிரத்து 200 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கபட்ட நெற்பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். சதவீத அடிப்படையில் நிவாரணம் வழங்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும். ஈரப்பதம் கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழப்பூதனூர், திருச்செங்கட்டாங்குடி ஆகிய 2 இடங்களில் விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் திருமருகல் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் இளஞ்செழியன், ஒன்றியக்குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருச்செங்கட்டாங்குடி வள்ளி கலியமூர்த்தி, கீழப்பூதனூர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X