search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி - விருதுநகரை சேர்ந்தவர்

    வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி விருதுநகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மணிகண்டபிரபு (வயது26). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது உறவினர் கண்ணதாசன் மற்றும் நண்பர்கள் சரவணன், ரமேஷ் ஆகியோருடன் கடந்த 16-ந் தேதி திருநள்ளாறு வந்தார். அங்கு சனிபகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவை தரிசனம் செய்து விட்டு கடற்கரைக்கு சென்றனர்.

    அங்கு மணிகண்டபிரபு, கண்ணதாசன், சரவணன் ஆகிய 3 பேரும் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அலையில் சிக்கி 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். உடனே கரையில் நின்ற ரமேஷ் சுதாரித்துக் கொண்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கடலில் இறங்கி சரவணன், கண்ணதாசன் ஆகிய 2 பேரையும் காப்பாற்றினார்.

    மணிகண்டபிரபுவை நீண்ட நேரம் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து கடலோர காவல்படை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் கடலில் இறங்கி தேடி பார்த்தனர். இந்த நிலையில் மணிகண்டபிரபு கடலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. கரை ஒதுங்கிய அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×