search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது

    ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலைய பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். 

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சீனிவாச நகரை சேர்ந்த கணேஷ்(வயது 29), காமராஜபுரத்தை சேர்ந்த ராகுல்தாஸ்(22), அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன்(21) என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×