என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.15½ கோடிக்கு மதுபானம் விற்பனை
Byமாலை மலர்16 Jan 2021 6:12 PM GMT (Updated: 16 Jan 2021 6:12 PM GMT)
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.15½ கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 218 கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகள் மூலம் வழக்கமாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெறும்.
இந்த நிலையில் பொங்கலன்று ரூ.9 கோடியே 89 லட்சத்து 4 ஆயிரத்து 330 மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது.
அதாவது வழக்கத்தை விட நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 3 மடங்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.
நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் ஒரு நாளைக்கு முன்பே மதுபானங்களை வாங்கி இருக்கலாம். அதனால் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று ரூ. 5 கோடியே 60 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 218 கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகள் மூலம் வழக்கமாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெறும்.
இந்த நிலையில் பொங்கலன்று ரூ.9 கோடியே 89 லட்சத்து 4 ஆயிரத்து 330 மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது.
அதாவது வழக்கத்தை விட நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 3 மடங்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.
நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் ஒரு நாளைக்கு முன்பே மதுபானங்களை வாங்கி இருக்கலாம். அதனால் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று ரூ. 5 கோடியே 60 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X