என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியாங்குப்பத்தில் கணவரை விட்டு பிரிந்த இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்15 Jan 2021 11:16 AM GMT (Updated: 15 Jan 2021 11:16 AM GMT)
அரியாங்குப்பத்தில் கணவரை விட்டு பிரிந்த இளம்பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
அரியாங்குப்பம் அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் ஸ்ரீதேவி. (வயது 25). இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கர்ப்பம் அடைந்த ஸ்ரீதேவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்தார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க கோபி வரவில்லை.
இதனால் ஸ்ரீதேவி மன வருத்தத்தில் இருந்தார். இடையில் ஸ்ரீதேவிக்கும், கோபிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தையுடன் நிரந்தரமாக தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.
ஆனாலும், கணவரை விட்டு பிரிந்ததால் ஸ்ரீதேவி விரக்தியுடன் இருந்து வந்தார். மேலும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாத ஸ்ரீதேவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி கிடந்த ஸ்ரீதேவியை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிச்சை பெற்று வந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது சகோதரர் காத்தமுத்து கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பம் அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் ஸ்ரீதேவி. (வயது 25). இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கர்ப்பம் அடைந்த ஸ்ரீதேவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்தார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க கோபி வரவில்லை.
இதனால் ஸ்ரீதேவி மன வருத்தத்தில் இருந்தார். இடையில் ஸ்ரீதேவிக்கும், கோபிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தையுடன் நிரந்தரமாக தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.
ஆனாலும், கணவரை விட்டு பிரிந்ததால் ஸ்ரீதேவி விரக்தியுடன் இருந்து வந்தார். மேலும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாத ஸ்ரீதேவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி கிடந்த ஸ்ரீதேவியை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிச்சை பெற்று வந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது சகோதரர் காத்தமுத்து கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X