என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை சென்னை வருகை
Byமாலை மலர்12 Jan 2021 11:26 PM GMT (Updated: 12 Jan 2021 11:26 PM GMT)
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். பொங்கல் மற்றும் துக்ளக் விழாவில் அவர் பங்கேற்கிறார்.
சென்னை:
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். பொங்கல் மற்றும் துக்ளக் விழாவில் அவர் பங்கேற்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பா.ஜ.க.வின் அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டா வரும் 14-ந் தேதி (நாளை) தமிழர் திருநாள் அன்று சென்னை வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க, கலை நிகழ்ச்சிகளோடு உற்சாகமாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
விமான நிலையத்தில் இருந்து சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதற்கென மதுரவாயலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பொங்கல் வைக்கும் விழா, விளையாட்டு போட்டிகள், தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு ஏற்பாடுகள் என காணும் பொங்கலை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
முக்கிய சந்திப்பில் இருந்து ஜே.பி.நட்டா மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்படுகிறார். பொங்கல் விழாவில் அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டா உரையாற்றுகிறார்.
பின்னர், கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்று, டெல்லி புறப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். பொங்கல் மற்றும் துக்ளக் விழாவில் அவர் பங்கேற்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பா.ஜ.க.வின் அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டா வரும் 14-ந் தேதி (நாளை) தமிழர் திருநாள் அன்று சென்னை வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க, கலை நிகழ்ச்சிகளோடு உற்சாகமாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
விமான நிலையத்தில் இருந்து சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதற்கென மதுரவாயலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பொங்கல் வைக்கும் விழா, விளையாட்டு போட்டிகள், தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு ஏற்பாடுகள் என காணும் பொங்கலை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
முக்கிய சந்திப்பில் இருந்து ஜே.பி.நட்டா மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்படுகிறார். பொங்கல் விழாவில் அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டா உரையாற்றுகிறார்.
பின்னர், கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்று, டெல்லி புறப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X