என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களம்பூர் அருகே சாராயம், மது விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்12 Jan 2021 10:43 AM GMT
களம்பூர் அருகே சாராயம், மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த் உத்தரவின்படி ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
களம்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வடமாதிமங்கலம் பகுதியில் குமாரி (வயது 53) என்பவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
அதே பகுதியில் பிரபு (38) என்பவர் மதுபாட்டில்களை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
எட்டிவாடி பகுதியில் முருகன் (40) என்பவர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழ்ப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் வினோத்குமார் (28) என்பவர் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X