என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஓட்டலை சூறையாடி உரிமையாளர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
Byமாலை மலர்10 Jan 2021 2:38 PM GMT (Updated: 10 Jan 2021 2:38 PM GMT)
நாகையில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஓட்டலை சூறையாடி விட்டு உரிமையாளர் உள்பட 2 பேரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை செம்மரக்கடை தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(வயது 52). இவர், தோணித்துறை சாலையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை மூடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நிவாஸ்(26) என்பவர், தனது நண்பருடன் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது அங்கு வைத்து அவர்கள் மது குடித்தனர். பின்னர் அவர்கள் ஆம்லெட் தரும்படி கேட்டுள்ளனர்.
அதற்கு ஜாகிர் உசேன், ஓட்டலில் எல்லாம் முடிந்து விட்டது. வியாபாரம் நடக்கும் இடத்தில் வைத்து மது குடிக்கலாமா? என்்று கேட்டுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து சென்ற நிவாஸ் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்து ஓட்டலில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர் ஜாகிர் உசேன மற்றும், ஓட்டல் கணக்காளர் அப்துல்லா கான் ஆகிய 2 பேரையும் கட்டையாலும், பாட்டிலாலும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவாஸ் மற்றும் அவர்கள் நண்பர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மது குடித்ததை தட்டி கேட்டவரை தாக்கி, ஓட்டலை அடித்து நொறுக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பாதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X