search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது

    கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசாருக்கு, மீன்சுருட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள மேலனிக்குழி செட்டிகுளம் மேற்கு கரையில் சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர், மேலனிக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயபிரகாஷ்(வயது 23) என்பதும், அவர் 950 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×