search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மகளை திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்: தையல் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

    நாகையில் மகளை திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தையல் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைகுளம் கீழ்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது50). இவர் மேலகோட்டைவாசல் பகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இவரது மகளை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்வேளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    அக்கரைகுளம் அண்ணாநகரைச் சேர்ந்த கமல்நாத் (28) என்பவர் ஏன் உனது மகளை எனக்கு திருமணம் செய்து வைக்காமல் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தாய் என்று கேட்டு கார்த்திகேயனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் டெய்லர் கடையில் இருந்தார். அப்போது கமல்நாத் மற்றும் அவரது நண்பர் நாகை மருந்து கொத்தளரோடு பகுதியைச் சேர்ந்த சிவா (29) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கார்த்திகேயனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமல்நாத், சிவா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×