என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி- ரூ.4 லட்சம் தப்பியது

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் ரைஸ்மில் தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

    நள்ளிரவில் மர்மநபர்கள் இந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது கண்காணிப்பு கேமரா ஒயர்களை துண்டித்தனர். பல மணி நேரம் முயற்சி செய்தும் எந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது தானியங்கி மூலம் வங்கிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை வங்கி ஊழியர்கள் சென்று பார்த்த போது எந்திரத்தின் ஒரு சில பகுதியில் உடைக்கப்பட்டிருந்தது. பணம் எதுவும் எடுக்கவில்லை.

    அந்த இயந்திரத்தில் ரூ.4 லட்சம் பணம் அப்படியே இருந்தது. கொள்ளையர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பி உள்ளது. இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மையத்திலுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×