என் மலர்
செய்திகள்

தேர்வு
கோவை அரசு கலைக்கல்லூரியில் 18-ந்தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடக்கம்
கோவை அரசு கலைக்கல்லூரியில் வருகிற 18-ந் தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது.
கோவை:
கோவை அரசு கலைக்கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை அரசு கலைக்கல்லூரியில் வருகிற 18-ந் தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பருவத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரையும், 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 4 மற்றும் 6-ம் பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையிலும் நடக்கிறது.
கொரோனா காரணமாக பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். தேர்வு கட்டணத்தை இன்று வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 1987-ம் ஆண்டு முதல் படித்து அரியர் வைத்து இருப்பவர்களும் பருவத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி எழுதலாம். மேலும் www.gacbe.ac.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை அரசு கலைக்கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை அரசு கலைக்கல்லூரியில் வருகிற 18-ந் தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பருவத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரையும், 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 4 மற்றும் 6-ம் பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையிலும் நடக்கிறது.
கொரோனா காரணமாக பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். தேர்வு கட்டணத்தை இன்று வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 1987-ம் ஆண்டு முதல் படித்து அரியர் வைத்து இருப்பவர்களும் பருவத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி எழுதலாம். மேலும் www.gacbe.ac.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story






