என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

    நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவுக்கு பின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. வெளியிடங்களில் இருந்து வருகிறவர்களால் உள்ளூர் மக்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக சோதனைசாவடிகளில் தீவிர பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் அரசு வழிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 820 பேர் பூரண குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 15-க்கும் கீழ் குறைந்து இருக்கிறது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 434 பேரிடம் இருந்து சளிமாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. தொடர்ந்து தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    Next Story
    ×