என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விருதுநகர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    விருதுநகர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் ஞானமணி (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த விஸ்வராஜ் (25) என்பவரை 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான விஷ்வராஜை குடும்பத்தினர் கண்டித்ததால் அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

    படுகாயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் மாமியார் வீட்டில் இருந்தார். இதையடுத்து இரவில் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×