என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
விருதுநகர் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
விருதுநகர் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் கொல்லர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 81). தனியாக வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சமையல் செய்தபோது ஸ்டவ் அடுப்பில் இருந்த மண்எண்ணெய் கசிந்து மூதாட்டியின் சேலையில் பட்டு தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரது மகன் மகேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி அம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






