என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வழிவிடுமாறு கூறியதால் தகராறு - லாரி உரிமையாளருக்கு அடி-உதை

    செங்கல்பட்டு அருகே வழிவிடுமாறு கூறியதால் ஏற்பட்ட தகராறில் லாரி உரிமையாளுக்கு சரமாரியாக அடி விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி மகேஷ் (வயது 35). இவர் சொந்தமாக 2 லாரிகளை வைத்து மணல், ஜல்லி வினியோகம் செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு திருநீர்மலை மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது 4 பேர் வழியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் வழிவிடுமாறு அந்தோணி மகேஷ் கூறினார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அந்தோணி மகேசை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் முகத்தில் காயமடைந்த அவர், அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநீர்மலையை சேர்ந்த கிருபைநாதன் (22), சரவணன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறை வாக உள்ள ரூபன், கவுதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×