என் மலர்
செய்திகள்

கைது
அஞ்செட்டி அருகே மது விற்றவர் கைது
அஞ்செட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (வயது 34). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அஞ்செட்டி போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரகுமார் மற்றும் போலீசார் காந்தி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர்.
Next Story






