என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    சாமல்பட்டி போலீசார், காமாட்சிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கோவிந்தன் (வயது 54) என்பவரை கைது செய்தனர். இதேபோல் ஊத்தங்கரை போலீசார், துறிஞ்சிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கோவிந்தராஜ் (27) என்பவரை கைது செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நூர்முகமது (43) என்பவரை கைது செய்தனர். பாகலூர் போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற சவுகத்அலி (23) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×