என் மலர்
செய்திகள்

கைது
அஞ்செட்டி அருகே மது விற்ற பெண் கைது
அஞ்செட்டி அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே உள்ள பிலிகுண்டுலு கிராமத்தை சேர்ந்தவர் கருங்கனி (வயது 52). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






